தமிழ்நாட்டில் ரோபோட்டிக்ஸ் மையம் அமைக்க ரூ.150 கோடி முதலீடு செய்யும் ஜென்ரோபோட்டிக்ஸ்
முதல்வர் திரு. ஜோசப் விஜய் முன்னிலையில் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
Chennai / August 13, 2026
சென்னை, ஆக. 13: கேரளாவைச் சேர்ந்த டீப்-டெக் ரோபோட்டிக்ஸ் நிறுவனமான ஜென்ரோபோட்டிக்ஸ், தமிழ்நாட்டில் உயர்தர ரோபோட்டிக்ஸ் ஏற்றுமதி வசதியை அமைப்பதற்காக அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.150 கோடி முதலீடு செய்ய உள்ளது.
இது தொடர்பாக, சென்னையில் இன்று முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் மற்றும் தமிழ்நாடு அரசின் தொழில்துறை அமைச்சர் திருமதி எஸ். கீர்த்தனா ஆகியோர் முன்னிலையில், ஜென்ரோபோட்டிக்ஸ் நிறுவனம் தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டது.
ஜென்ரோபோட்டிக்ஸ் நிறுவனத்தின் தலைமை இயக்க அதிகாரி நிகில் என்.பி. மற்றும் இயக்குநர் திரு. ரஷித் கே. ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, கைடன்ஸ் தமிழ்நாடு (Guidance Tamil Nadu) தலைமை செயல் அதிகாரி திரு. தீபக் ஜேக்கப் ஐஏஎஸ் உடன் அதைப் பரிமாறிக் கொண்டனர். தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் டாக்டர் எம். சாய் குமார் ஐஏஎஸ் மற்றும் தொழில்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் எஸ். விஜயகுமார் ஐஏஎஸ் ஆகியோரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
நாடு முழுவதும் தனது உற்பத்தி மற்றும் செயல்பாட்டுத் தடத்தை விரிவுபடுத்தும் நிறுவனத்தின் திட்டங்களின் ஒரு பகுதியாக இந்தத் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.
உலகின் முதல் ரோபோடிக் ஸ்கேவெஞ்சரான ‘பாண்டிகூட்’ (Bandicoot)-ஐ உருவாக்கி ஜென்ரோபோட்டிக்ஸ் வரலாறு படைத்தது. இந்த ரோபோ, இந்தியாவின் பல மாநிலங்களில் நகர்ப்புற சுகாதார அமைப்புகளில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு திட்டம், இதுவரை ஜென்ரோபோட்டிக்ஸ் மேற்கொண்ட மிகப்பெரிய தனித்த முதலீட்டு உறுதிப்பாடுகளில் ஒன்றாகும். மேலும், சுகாதாரம், தொழில்துறை, மருத்துவம் மற்றும் பாதுகாப்பு ரோபோட்டிக்ஸ் துறைகளில் சர்வதேச சந்தைகளில் நிறுவனத்தின் விரிவாக்க முயற்சியை இது மேலும் வலுப்படுத்துகிறது.
புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி, மேம்பட்ட ரோபோட்டிக்ஸ் தீர்வுகளுக்கான உற்பத்தித் தளத்தை நிறுவனம் தமிழ்நாட்டில் அமைக்கும். இங்கு உற்பத்தி செய்யப்படும் தயாரிப்புகள் சிங்கப்பூர், மலேசியா மற்றும் மத்திய கிழக்கு மற்றும் MENA பிராந்தியங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படும்.
இந்தத் திட்டம் தொடங்கப்படுவதன் மூலம், ஜென்ரோபோட்டிக்ஸின் சமீபத்திய பாண்டிகூட் தொடர் ரோபோக்கள், நீர் மற்றும் சுகாதார ஆய்வு ரோபோக்கள், வில்போர் (Wilboar) மற்றும் பிற முன்னணி தொழில்நுட்ப தளங்களுக்கான உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மையமாக தமிழ்நாடு உருவாகும். உயர்மதிப்புடைய, ஏற்றுமதி நோக்கமுடைய உற்பத்தி முதலீடுகளை ஈர்க்கும் மாநிலத்தின் விரிவான முயற்சியுடனும் இது இணைந்துள்ளது.
சர்வதேச சந்தைகளில் பயன்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட உயர்தர ரோபோட்டிக்ஸ் அமைப்புகளை உற்பத்தி செய்வதில் தமிழ்நாடு வசதி கவனம் செலுத்தும். புதிய புவியியல் சந்தைகளில் சுகாதாரம், பாதுகாப்பு, தொழில்துறை மற்றும் விண்வெளி பயன்பாடுகளில் ஜென்ரோபோட்டிக்ஸ் மேற்கொண்டு வரும் விரிவாக்கத்திற்கும் இது ஆதரவளிக்கும்.
அதிகரித்து வரும் சர்வதேச தேவையை பூர்த்தி செய்யத் தேவையான அளவையும் திறனையும் தமிழ்நாடு வழங்குவதாகக் குறிப்பிட்ட திரு. நிகில், இந்த முதலீடு மாநிலத்தின் உற்பத்திச் சூழல் மீதான நிறுவனத்தின் நம்பிக்கையை பிரதிபலிப்பதாகக் கூறினார். மேலும், மத்திய கிழக்கு மற்றும் MENA பிராந்தியம் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் வேகமாக வளர்ந்து வரும் ரோபோட்டிக்ஸ் தேவையை பூர்த்தி செய்யக்கூடிய, விரிவுபடுத்தத்தக்க ஏற்றுமதி தளத்தை உருவாக்குவது நிறுவனத்தின் நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.
“கேரளாவில் நாங்கள் உருவாக்கியுள்ள உற்பத்தித் திறனுக்கு இந்த முதலீடு மேலும் வலுசேர்க்கிறது. இவை இரண்டும் இணைந்து, தற்போது நாங்கள் தீவிரமாக விரிவடைந்து வரும் உலகளாவிய சந்தைகளுக்கு சேவை செய்யும் திறனை எங்களுக்கு வழங்குகின்றன. அதேவேளையில், ஜென்ரோபோட்டிக்ஸை தொடக்கத்திலிருந்தே வடிவமைத்த புதுமைச் சூழலுடன் நாங்கள் தொடர்ந்து இணைந்திருக்கவும் இது உதவுகிறது,” என்று அவர் மேலும் கூறினார்.
கேரளாவிலும் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்த ஜென்ரோபோட்டிக்ஸ் தயாராகி வருகிறது. தற்போது திருவனந்தபுரம் டெக்னோபார்க், பாலக்காடு கஞ்சிக்கோடு மற்றும் AMTZ ஆகிய இடங்களில் நிறுவனம் தனது வசதிகளை இயக்கி வருகிறது. மேலும், திருவனந்தபுரம் மற்றும் பாலக்காட்டில் கூடுதல் விரிவாக்கப் பணிகளும் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாடு மற்றும் கேரளாவில் மேற்கொள்ளப்படும் இந்த விரிவாக்கங்கள் இணைந்து, ஜென்ரோபோட்டிக்ஸின் உற்பத்தி மற்றும் செயல்பாட்டுத் திறனில் குறிப்பிடத்தக்க அளவிலான வளர்ச்சியை ஏற்படுத்தும். உள்நாட்டு மற்றும் சர்வதேச வளர்ச்சித் திட்டங்களை நிறுவனம் வேகப்படுத்தி வரும் நிலையில் இந்த விரிவாக்கம் மேற்கொள்ளப்படுகிறது.
திரு. விமல் கோவிந்த் எம்.கே., திரு. அருண் ஜார்ஜ், திரு. நிகில் என்.பி. மற்றும் திரு. ரஷித் கே. ஆகியோரால் நிறுவப்பட்ட ஜென்ரோபோட்டிக்ஸ், சுகாதார ரோபோட்டிக்ஸில் தொடங்கிய தனது பயணத்திலிருந்து, மருத்துவம், தொழில்துறை, பாதுகாப்பு மற்றும் விண்வெளி ரோபோட்டிக்ஸ் துறைகளில் செயல்படும் பன்முகப்படுத்தப்பட்ட டீப்-டெக் நிறுவனமாக வளர்ந்துள்ளது.
மனிதர்கள் கழிவுநீர் கால்வாய்களுக்குள் இறங்க வேண்டிய தேவையை அகற்றும் ‘பாண்டிகூட்’ ரோபோவை உருவாக்கியதற்காக ஜென்ரோபோட்டிக்ஸ் மிகவும் அறியப்படுகிறது. அதன் பின்னர் நிறுவனம் மருத்துவம், தொழில்துறை, பாதுகாப்பு மற்றும் விண்வெளி ரோபோட்டிக்ஸ் துறைகளிலும் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தியுள்ளது. சர்வதேச சந்தைகளிலும் அதன் இருப்பு தொடர்ந்து வளர்ந்து வருகிறது.
முடிவு
Photo Gallery