கடலுணவு மதிப்புக்கூட்டலுக்கான நேஷனல் ஸ்கில் ஒலிம்பியாட் போட்டியின் இரண்டாவது பதிப்பில் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த திரு.P. சூர்யா பாஸ்கர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்

Chennai / July 2, 2026

சென்னைஜூலை 2: ஆந்திரப் பிரதேசத்தின் காக்கிநாடாவில் உள்ள தேவி ஃபிஷரீஸ் லிமிடெட் நிறுவனத்தில் பணியாற்றும் திரு.P. சூர்யா பாஸ்கர், இங்கு நடைபெற்ற Seafood Expo Bharat 2026-இன் போது நடைபெற்ற கடலுணவு மதிப்புக்கூட்டலுக்கான நேஷனல் ஸ்கில் ஒலிம்பியாட் போட்டியின் இரண்டாவது பதிப்பின் கிராண்ட் ஃபினாலேவில் நடைபெற்ற விறுவிறுப்பான இறுதிப்போட்டியில் வெற்றியாளராகத் தேர்வுசெய்யப்பட்டார்.

கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையமான MPEDA, இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, புதன்கிழமை நடைபெற்ற ஒலிம்பியாட் போட்டியின் இறுதிச்சுற்றில் பயிற்சி பெற்ற 10 கடலுணவு பதப்படுத்தல் நிபுணர்கள், கடலுணவுப் பொருட்களைத் தயாரிப்பதில் தங்களது சமையல் திறனையும் தொழில்நுட்ப நிபுணத்துவத்தையும் வெளிப்படுத்தினர்.

தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் உள்ள தேவா & கோ நிறுவனத்தைச் சேர்ந்த திரு.முத்துக்குமரன் இரண்டாம் இடத்தைப் பெற்றார். மேற்குவங்கத்தின் கொல்கத்தாவில் உள்ள SS சீஃபுட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தைச் சேர்ந்த செல்வி. சாகரிகா சர்தார் மற்றும் ஒடிசாவின் புவனேஸ்வரில் உள்ள சப்ரி ஃபுட் ப்ராடக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தைச் சேர்ந்த செல்வி. பரசராணி ஜேனா ஆகியோர் முறையே மூன்றாம் மற்றும் நான்காம் இடங்களைப் பெற்றனர்.

இறுதிச்சுற்றில் வெற்றி பெற்றவருக்கு ₹1,00,000 ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் பெற்றவருக்கு ₹75,000, மூன்றாம் இடம் பெற்றவருக்கு ₹50,000 வழங்கப்பட்டது. நான்காம் இடம் பெற்றவருக்கு ₹25,000 ஆறுதல் பரிசாக வழங்கப்பட்டது.

MPEDA சேர்மேன் திரு. P. ஜவஹர், டைரக்டர் டாக்டர் ராம் மோகன் M.K., செக்ரட்டரி டாக்டர் ஜிபின் குமார், ஜாயிண்ட் டைரக்டர் திரு. அனில்குமார் மற்றும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சீஃபுட் எக்ஸ்போர்ட்டர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (SEAI)-இன் CEO டாக்டர் K N ராகவன் ஆகியோர் வெற்றியாளர்களுக்கு ரொக்கப் பரிசுகள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.

கிராண்ட் ஃபினாலேவில், சர்வதேச சந்தைகளில் அதிக தேவை உள்ள ஆறு மதிப்புக்கூட்டப்பட்ட கடலுணவுப் பொருட்களான நோபாஷி இறால், பிரெடட் பட்டர்ஃப்ளை இறால், சமைக்கப்பட்ட தோல் நீக்கப்பட்டு நரம்பு அகற்றப்பட்ட வால் கொண்ட இறால் (PDTO), மசாலாவில் ஊறவைக்கப்பட்ட இறால் ஸ்கியூவர்கள், பிரெடட் ஸ்குவிட் ரிங்ஸ் மற்றும் மீன் ஃபில்லெட்டுகள் ஆகியவற்றைத் தயாரிக்கும் பணி இறுதிப்போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்டது.

இந்தப் பொருட்களை அவர்கள், கொச்சியில் உள்ள ICAR-CIFT-இன் மூத்த அறிவியலாளர் டாக்டர் சாரிகா.K., கொச்சியில் உள்ள NIFPHATT-இன் பதப்படுத்தல் மற்றும் தர உத்தரவாத மேற்பார்வையாளர் டாக்டர் நிதின்.C.T., பராயில் சீஃபுட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் உற்பத்தி மேலாளர் திரு. பிரான்சிஸ் அசிசி, சந்தியா அக்வா எக்ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பொது மேலாளர் திரு. ஜெயன் ஜேக்கப் மற்றும் VKM ஃபுட்ஸ் நிறுவனத்தின் பொது மேலாளர் திரு. விஜயகிருஷ்ணா ஆகியோர் அடங்கிய மதிப்புமிக்க நடுவர் குழுவின் முன்னிலையில் தயாரித்தனர்.

போட்டியாளர்களின் தொழில்நுட்பத் திறன், சுகாதார நடைமுறைகள், துல்லியம், தயாரிப்பு வழங்கும் முறை மற்றும் இறுதிப் பொருட்களின் தரம் ஆகியவற்றின் அடிப்படையில் நடுவர் குழு மதிப்பீடு செய்தது.

திரு. ஜவஹர் அவர்கள் கூறுகையில், இந்த ஒலிம்பியாட், சர்வதேச சந்தைகளின் மாறிவரும் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய வலிமையான மற்றும் உலகளாவிய போட்டித்திறன் கொண்ட கடலுணவுத் துறையை உருவாக்குவதில் ஒரு முக்கிய மைல்கல்லாக திகழ்கிறது என்றார்.

“தர உத்தரவாதம், உணவுப் பாதுகாப்பு, பதப்படுத்தலில் சிறப்புத் திறன், திறமையான பணியாளர்கள், நிலையான கடலுணவு உற்பத்தி மற்றும் நம்பகமான விநியோகச் சங்கிலி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் MPEDA உறுதியான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவின் கடலுணவு ஏற்றுமதி சூழலை மேலும் வலுப்படுத்தும் முக்கிய தளமாக இந்த ஒலிம்பியாட் திகழ்கிறது,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் மூத்த அதிகாரிகள், கடலுணவு ஏற்றுமதியாளர்கள், சர்வதேச வாங்குநர்கள், தொழில்துறை தலைவர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் Seafood Expo Bharat 2026-இல் பங்கேற்ற பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இறுதிப்போட்டியாளர்கள் தயாரித்த விருதுபெற்ற மதிப்புக்கூட்டப்பட்ட கடலுணவுப் பொருட்கள், ஸ்கில் ஒலிம்பியாட் பெவிலியனில் காட்சிப்படுத்தப்பட்டன. மேலும், MPEDA-இன் பயிற்சித் திட்டங்கள் மூலம் உருவாக்கப்பட்ட ஏற்றுமதி நோக்கிலான மதிப்புக்கூட்டப்பட்ட கடலுணவுப் பொருட்களின் நேரடி செயல்விளக்கங்கள் மற்றும் சுவைத்துப் பார்க்கும் அமர்வுகளும் இடம்பெற்றன.

மதிப்புக்கூட்டப்பட்ட கடலுணவுப் பொருட்களை சுவைத்துப் பார்க்கும் சிறப்பு அமர்வும் MPEDA-இன் ஸ்கில் ஒலிம்பியாட் பெவிலியனில் நடைபெற்றது.

இந்த நிகழ்வை முன்னிட்டு, இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரைப் பகுதிகளில் MPEDA 50 கடலுணவு மதிப்புக்கூட்டல் பயிற்சித் திட்டங்களை நடத்தியது. இதன் மூலம் 2,500-க்கும் மேற்பட்ட கடலுணவு பதப்படுத்தல் தொழிலாளர்கள் மற்றும் நிபுணர்களுக்கு சர்வதேச சந்தைகளில் அதிக தேவை உள்ள கடல்சார் பொருட்களைத் தயாரிப்பதற்கான பயிற்சி வழங்கப்பட்டது.

பிராந்திய அளவிலான போட்டிகள் மும்பை (மேற்குக் கடற்கரை மண்டலம்) மற்றும் விசாகப்பட்டினம் (கிழக்குக் கடற்கரை மண்டலம்) ஆகிய இடங்களில் நடைபெற்றன. ஜூன் 30 அன்று நடைபெற்ற இந்தப் பிராந்தியப் போட்டிகளில் இருந்து தேர்வுசெய்யப்பட்ட 10 போட்டியாளர்கள் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றனர்.

Photo Gallery

+
Content
+
Content
+
Content